கேட்டவை கிடைக்குமிடம்:

Sunday, May 9, 2010

பலத்தைக்காட்ட ஒரு தருணம்!


பாரதீய ஜனதா கட்சி என்பது ஆர்.எஸ்.-எஸின். அரசியல் வடிவம். ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பு-களின் சமுதாயக் கொள்கைகள் என்னவோ, அவை அத்தனையும் பா.ஜ.க.வுக்கும் உண்டு.

சுருக்கமாகச் சொல்ல வேண்டு-மானால் பா.ஜ.க.வின் அவிட்டுத்திரி சிண்டு இந்த சங்பரிவார் சாம்பார்-களிடம் தான்!

ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்ற ஒருவர்தான் பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக இருக்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடிய பா.ஜ.க., வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் குழுவில் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி ஒருவர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்கிற அளவுக்கு பா.ஜ.க.-மீது குதிரை சவாரி செய்யும் ஆதிபத்யம் ஆர்.எஸ்.எஸுக்கு உண்டு.

பா.ஜ.க.வில் இருந்தாலும் அந்தப் பார்ப்பன வெறித்தனத்தின் வெக்கையில் மாற்றமில்லை.

இதில் உள்ள வட்டியும் குட்டியும் போட்ட வெட்கக்கேடு என்னவென்-றால் இந்த அமைப்புகளில் உள்ள பார்ப்பனர் அல்லாத ஆசாமிகள் நிஜப் புலிகளைவிட _ அதிகமாகத் துள்ளித் தொலைப்பார்கள்; - தன்மீது சந்தேகக் கரும்புள்ளியைக் குத்திவிடக் கூடா-தல்லவா!

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்-தான் அத்வானி, நரேந்திரமோடி, தொகாடியா வகையறாக்கள்.

குஜராத் நரேந்திர மோடியிருக்-கிறாரே _ தன்னை சூரப்புலியாகக் காட்டிக் கொள்ளும் அவசியத்தில் இருக்கிறார். இல்லாவிட்டால் எந்த நேரத்திலும் ஆரிய சந்திரகாந்தாக்களின் சவுக்கடி மரண அடியாக விழுமே!

கோல்வால்கர் கூறும் வருணாசிரம தர்மத்தை வடிகட்டாமலேயே ஏற்றுக் கொள்ளும் வடிகட்டிய விபீஷணர் இவர்.

2007-ஆம் ஆண்டில் புத்தகம் ஒன்றை எழுதி மாட்டிக் கொண்டார் கர்மயோக் என்னும் நூலை எழுதி-னார். குஜராத் மாநில அரசின் செய்தித்-துறை அதனை வெளியிட்டு இருந்தது.

சில வேளைகளில் மலம் அள்ளும் பணியில் ஈடுபட்டிருப்போர்க்கு ஞானம் ஊட்டப் பெறலாம். அவர்களின் வேலை சமூகத்தில் - _ மகிழ்ச்சிக்காகவும், கடவுள்-களின் சந்தோஷத்திற்காகவும் செய்யப்-படுவதாகும் எனவும் கருதலாம் என்று அந்த நூலிலே குறிப்பிடப்பட்டு இருந்தது (The Times of India Dated: 5.5.2010).

ஆக மலம் அள்ளுபவர்கள் மலம் அள்ளுபவர்களாகவே இருக்க வேண்-டும் _ அது கடவுளின் சந்தோஷத்துக்கு உரியது என்ற இந்து மதத்தின் காலா-வதியான கர்மா தத்துவத்தை 2007_லும் காப்பாற்றும் ஒரு வேலையைச் செய்தார் - _ கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்-பியது.

அதனைக் கண்டித்து மோடியின் கர்ம-யோக் நூலைக் கொளுத்தும் போராட்டத்தைத் திராவிடர் கழகம் நடத்தியது (11.12.2007).

திராவிடர் கழகத் தலைவர் மான-மிகு கி. வீரமணி அவர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்-சித் தமிழர் தொல். திருமாவளவனும் கலந்து கொண்டு கைதானார்கள்.

மலம் அள்ளும் ஜாதிக்கு மலம் அள்ளும் ஜாதிக்கு குப்பை அள்ளும் ஜாதிக்கு

குப்பை அள்ளும் ஜாதிக்கு

மோட்சம் கிடைக்குமாம்

மோட்சம் கிடைக்குமாம்

எழுதுகிறார் எழுதுகிறார்

நரேந்திர மோடி எழுதுகிறார்

புதுப்பிக்கிறார் புதுப்பிக்கிறார்

குலதர்மத்தைப் புதுப்பிக்கிறார்

எரிப்போம், எரிப்போம்

மோடியின் நூலை எரிப்போம்!

கொளுத்துவோம்

கொளுத்துவோம்

குலதர்மத்தைக் கொளுத்துவோம்!

சாக்கடை அள்ள சாக்கடை அள்ள

போகட்டும் போகட்டும்

சங்கராச்சாரியார் போகட்டும்!

போகட்டும் போகட்டும்!

சொர்க்கலோகம் போகட்டும்!

மலம் அள்ள மலம் அள்ள

போகட்டும் போகட்டும்

மனுவாதிக்கூட்டம் போகட்டும்

போகட்டும் போகட்டும்

மோட்ச லோகம் போகட்டும் வருகிறோம் வருகிறோம்

நெருப்பு வைக்க வருகிறோம்

என்று கருஞ்சட்டை தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் தோழர்களும் விண்ணதிர வேங்கையெனச் சீறி எழுந்து முழக்கமிட்டனர்.

அப்பொழுதாவது புத்தி கொள் முதல் பெற வேண்டாமா? இப்பொழுது மீண்டும் அதே பாணியில், அதே திமி-ரில் தம் அழுக்கடைந்த ஆரியத்துக்கு துணை போன சாக்கடைப் புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார்.

மறுபடியும் ஒரு புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சமாஜிக் சம்ரஸ்தா என்பது நூலின் பெயர் மே 1 (2010) அன்று அகமதாபாத்தில் அந்த நூல் வெளியிடப்பட்டது. அந்த விழாவில் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடி பேசியிருக்கிறார்.

மனநலம் குன்றிய குழந்தைகள் உள்ளவர்களின் வீடுகளுக்குச் செல்லும் போது நாம் எப்படி அந்தக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்வோமோ, அதேபோல தாழ்த்தப்பட்ட மக்களையும் நாம் நடத்த வேண்டும் என்று தனது உளறல் வாயை ஊர் சிரிக்கத் திறந்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவர்களை மனநலம் குன்றியவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்-ளார்.

புரியும்படிச் சொன்னால் பைத்தியக்-காரர்கள் என்று பட்டம் சூட்டுகின்-றார்.

பார்ப்பனியத்தின் அடி வருடும் இந்தப் பைத்தியக்காரர்கள் பார்ப்-பனியத்தால் பன்னூறு வருட காலம் அழுத்தி மிதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து மனநலம் குன்றியவர்கள் என்று மமதையோடு கூறுகிறார் என்றால், இந்த மண்டைக் கனத்தை 21-ஆம் நூற்றாண்டிலும் அனுமதிக்கப் போகிறோமோ என்பது தான் நம் முன் வெடித்துச் சிதறும் கேள்வி என்னும் நெருப்புத் துண்டமாகும்.

மோடியின் மூர்க்கத்தனமான வார்த்தைகளை எதிர்த்து மாநிலங்-களவையில் அமளி ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினரான பிரவீன் ராஷ்ட்ரபால் கண்டனக் குரலை எழுப்-பினார். தலித்துகள் குறித்த தம் எண்-ணத்தை இதன்மூலம் மோடி வெளிப்-படுத்தியுள்ளார் என்று நெருப்புக் குரல் கொடுத்தார். இது டாக்டர் அம்பேத்-கரையே அவமதித்ததாகும் என்று வெகுண்டெழுந்தார். இவருக்கு ஆதரவாக ஜெயந்தி நடராசன், ஜே.டி. சீலம், ஈஸ்வர்சிங் எம்.ஏ. கான் உள்ளிட்டோர் ஆர்த்து எழுந்தனர். கடும் அமளியின் காரணமாக மாநிலங்-களவை ஒத்தி வைக்கப்பட நேர்ந்தது.

மக்களவையிலும் காங்கிரஸ் உறுப்-பினரான புனியா குரல் எழுப்பினார், நரேந்திரமோடி போன்றவர்களை தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

அவை ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்ப்புக் கணை எரி நெருப்பாய்த் தகித்தது.

வருணாசிரமம் என்பதை அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள் மோடிபோல் தான் நடந்து கொள்வார்கள்.

பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்-சருமான டாக்டர் முரளி மனோகர் ஜோஷி இதே பாணியில் பேசியவர்-தான். கடுமையான கண்டனக் கணை-களுக்கு இரையானவர்தான்.

1991-இல் மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கும் பார-தீய ஜனதாவுக்கும் துவக்கத்தில் உடன்-பாடு ஏற்படவில்லை. உடனே பாரதீய ஜனதா, தனது கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இதுபற்றி பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பார்ப்பன முரளி மனோகர் ஜோஷி டில்லியில் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து ஒரு பேட்டி அளித்தார். ஜூலை 11 ந் தேதி (1991) இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்-டில் வெளிவந்த பேட்டி இதுதான்.

பாரதீய ஜனதாவை தங்கள் வசதிக்கேற்ப யாரும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. பா.ஜ.க.வை நீங்கள் ஒரு பறையனைப் போல் நடத்தக் கூடாது இதைச் செய்துவிட்டு, நாங்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது

இவ்வாறு பார்ப்பன இறுமாப்போடு தாழ்த்தப்பட்ட மக்களை அவமதித்-திருக்கிறார், பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்.

பாரதீய ஜனதா தலைவரின் இந்தப் பார்ப்பனத் திமிர் பேட்டியைக் கண்டித்து, சில சமூக நல அமைப்புகள் குடியரசுத் தலைவருக்கு தந்திகளையும் அனுப்பின.

சு.சாமி என்ற பார்ப்பனர்கூட, ஒருமுறை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை International Pariah என்று அழைத்-ததையும் இந்த இடத்தில் நினைவு கூர்தல் அவசியம்.

பார்ப்பனர்களிடத்தில் அவர்களின் தொங்கு சதைகளி-டத்தில் பார்ப்பனர் அல்லா-தாரின் பலம் எத்தகையது என்-பதை யதார்த்தமாக உணர்த்தாத-வரை அவர்களின் ஆணவத் திமிர் அடங்கப் போவதில்லை.

பார்ப்பனர் அல்லாதார் புரிந்து கொள்வார்களாக!

No comments:

Post a Comment